Friday, May 22, 2009

ஒரு ஊரில் ஒரு புலி இருந்திச்சாம்

கடந்த எட்டு மாசமாய் இலங்கயில் நடந்த சம்பவங்கள் என் மனதில் இரண்டு வித்தியாசமனான எண்ணங்களை கொடுக்கின்றன....

- .....10000க்கணக்கான அப்பாவிகள் ...இந்திய வம்சாவளியினர் ....people of Indian origin செத்துப்போனார்கள் என்ற மிகப்பெரிய வருத்தம்.... சில வெளிநாட்டு news channelகள் புட்டு புட்டு வைக்கின்றன...கோரமாய் உள்ளது...அப்பாவி மக்களின் அவலம் பார்க்க முடியவில்லை..ஐயோ பாவம் பெண்டு பிள்ளைகளும்...முதியோரும் பட்டினியாலும் குண்டு வெடிப்பாலும் சாவது நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை...ஒபாமா ஆட்சிக்கு வந்த பின்னும் யாழில் பொது மக்கள் சாவது நிற்கவில்லை...ஆக அமேரிக்கா கண்ணை மூடிக்கொண்டிருந்தது தான் உண்மை

- அதே சமையம் உலகின் மிக பயங்கரமான ....இது நாள் வரைக்கும் பெரு வெற்றி பெற்ற ஒரு முக்கியமான ...முன்னோடியான தீவிரவாத (விடுதலை? ) இயக்கத்தை (LTTEயை) ஒரு சின்ன அரசு (Sri Lanka) இராணுவத்தால் முறியடித்துள்ளது கண்டு ஆச்சர்யம்.......

கடந்த 40 வருடங்களில் பெரிதாகிவிட்ட தீவிரவாதத்தை எந்த அரசும் இராணுவ ரீதியாய் இவ்வளவு முழுமையாய் முறியடித்தாய் சரித்திரம் இல்லை

இலங்கை இராணுவத்தின் வெற்றிக்கு பல காரணங்கள்.

முக்கியமாய் இந்தப் போரில் பொது மக்கள் செத்தது பற்றி இலங்கை அரசு கவலைப்படவே இல்லை..... இலங்கை இராணுவம் எல்லார் மீதும் சரமாரியாய் குண்டும், பீரங்கி வெடியும் போட்டு விட்டு ...புலிகளை மட்டும் கொன்று விட்டோம் என்று சொல்லிவிட்டார்கள்...செத்துப் போனது பத்தாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களும் தான்....

செய்தி நிருவனங்களை ஒட்டுமொத்தமாய் யாழ்பாணத்துக்குள் விடவேயில்லை ....உள்ளே என்ன நடக்கிறது என்று வெளி உலகுக்கு தெரியாமலே போய் விட்டது

ராஜபக்ஸேவுக்கு ஓட்டு போட்டது பெரும்பான்மை சிங்களர்களே. இந்திய தமிழர்கள் செத்தால் சிங்களர்களுக்கு வருத்தம் இல்லை என்றாகிவிட்டது.

அண்டை நாடான இந்தியா, பொது மக்கள் சாவை கண்டுகொள்ளவே இல்லை என்ற பெரும் வரும் வருத்தம் எனக்கு... மாறாக இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவியும் தந்தது !! சோனியாவுக்கு இந்தியர்கள் செத்தாலும் தமிழர்கள் செத்தாலும் கவலை இல்லை என்ற எண்ணம் போலும் (my guess) .

இதே இராணுவ வெற்றியை காஷ்மீரில் இந்தியாவால் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே....I do not think India has the political will. வருண் காந்தி தப்பாய் பேசிவிட்டான்(ர்) என்று ஊபியிலும் மபியிலும் கேரளாவிலும் 30 சீட் பா ஜா பா வுக்கு போச்சு என்று புலம்புகிறார்கள் முஸ்லிம் பாஜாபா காரர்கள்...வெரும் பேச்சுக்கு இப்படியென்றால், காஷ்மீரில் மக்கள் செத்தால் இந்தியாவே அழும்...கத்தும், ரகளை செய்யும் ....

எது எப்படியானாலும், LTTEயின் தோல்வி பற்றி வரும் நாட்களில் அரசுகளும், இராணுவங்களும் ஆராயும்......

பாகிஸ்தானால் அல் குவைதாவுக்கு இதை செய்ய முடியுமா ?

இந்தியாவால் காஷ்மீரில் இதை செய்ய முடியுமா ?

ரஷ்யாவால் இதை cechniyaவில் இதை செய்ய முடியுமா என்றெல்லாம் கேள்விகள் வரும் ...

இஸ்ரயில் ?? உலகின் மிகச்சிறந்த இராணுவம் என்று சொல்லிவிட்டு அவர்களால் ஹெசபுல்லாவை ஒன்றுமே செய்யமுடியவில்லை

என்னை பொருத்த வரையில் உலகில், வியட்நாம் போருக்குப் பின் தீவிரவாத வரலாற்றில் இது ஒரு திருப்பம்

LTTEயின் பணத்தை அமேரிக்கா முடக்கியதும் காரணமோ ?



அன்புடன்

சுப்பு / விநாயக் (வலைப்பெயர்)

Tags :
LTTE, Tamil Diaspora, Sri Lanka's War Against LTTE, Military victories

0 comments: